Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

அரவக்குறிச்சி அருகே விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :

கரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்தவர் சிவராஜா(48). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது நண்பரான டெல்லி(45), திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோகரன்(50) ஆகியோருடன் நேற்று கரூர் வந்துவிட்டு மீண்டும் திண்டுக்கல்லுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகேயுள்ள பொன்னாகவுண்டனூர் பிரிவு சாலை அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுற பள்ளத்தில் இறங்கி, அங்கிருந்த பாறையில் மோதியது. இதில் சிவராஜா, மனோகரன் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். டெல்லி காயமடைந்தார். அரவக்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x