Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

புதுக்கோட்டையில் சாலை மறியல் :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே திருக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கிரீன்லேண்ட், திரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியது. வடிகால் வாய்க்கால்களையும் ஆக்கிரமித்துள்ளதால் மழை நீர் வெளியேறவில்லை.

இந்நிலையில், தேங்கிய மழை நீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் அசோக் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x