Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM
நாகப்பட்டினம்: நாகை கோட்டத்தில், இந்திய அஞ்சல் துறையின் சார்பில், தேசிய அஞ்சல் வார விழா அக்.11-ம் தேதி தொடங்கியது. அக்.17-ம் தேதி வரை கொண்டாப்படும் இவ்விழாவின் ஒரு அங்கமாக நேற்று அஞ்சல் ஆயுள் காப்பீடு தினமாக கொண்டாடப்பட்டது.
இன்று (அக்.13) அஞ்சல் தலை சேமிப்பு மற்றும் வணிக மேம்பாடு தினமாகவும், அக்.16-ம் தேதி அஞ்சல்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த நாட்களில் பொதுமக்கள், நாகப்பட்டினம் கோட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர் தலைமை அஞ்சலகங்களிலும், அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் புதிய சேமிப்பு கணக்குகள், அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு என அனைத்து அஞ்சல் துறை சேவைகளையும் தொடங்கி பயன் அடையலாம் என நாகப்பட்டினம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பானுமதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT