Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

காரைக்காலில் 22 மாதங்களுக்குப் பின்னர் - செயல்பாட்டுக்கு வந்த கான்ஃபெட் பெட்ரோல் பங்க் :

புதுச்சேரி அரசு சார் நிறுவனமான கான்ஃபெட் பெட்ரோல் பங்க் காரைக்காலில் 22 மாதங்களுக்குப் பின்னர் நேற்று முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

புதுச்சேரி அரசு சார் கூட்டுறவு நிறுவனமான கான்ஃபெட் மூலம் மாநிலம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக் கப்பட்டு, லாபகரமாக இயங்கி வந்தன. காரைக்கால் மாவட்டத் தில் 3 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஊழியர்களுக்கு ஊதியம் கூட தரமுடியாத நிலையில், நலிவடையத் தொடங்கின. இதையடுத்து, 2020-ம் ஆண்டில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையி லான அரசு அமைந்தபின்னர், நலிந்த நிறுவனங்களை மேம் படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டதன் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 3 பெட்ரோல் விற்பனை நிலையங்களையும் புதுப்பிக்கும் பணிகள் நடை பெற்றுவந்தன.

இதைத்தொடர்ந்து, காரைக் கால் அம்மாள்சத்திரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் 22 மாதங்களுக்குப் பிறகு நேற்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு நேற்று நடைபெற்ற பெட்ரோல் விற்பனை தொடக்க விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாக ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாகக் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு வாழ்த்து தெரி வித்தனர். அடுத்தக்கட்டமாக மற்ற 2 பெட்ரோல் விற்பனை நிலையங் களையும் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையம் மீண்டும் திறக் கப்பட்டது ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x