Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் :

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 27.10.2021 அன்று பிற்பகல் 4 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சங்கு கூடத்தில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x