Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கசவன்குன்று கிராமத்தில் கொப்பம்பட்டி காவல் நிலையம் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிசிடிவி கேமரா திறப்பு விழா நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கசவன்குன்று சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 5 சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை தொடக்கி வைத்தார். தொடர்ந்து ஆர்.சி. நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து பார்வையிட்டார். பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கொப்பம்பட்டி உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார், பள்ளி தலைமையாசிரியர் வரபிரசாதம், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், விவசாய அணி மாவட்ட செயலாளர் முத்துசாமி கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க தேசிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் சின்னசாமி மற்றும் கலை இலக்கிய அணி செயலாளர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT