Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM
தூத்துக்குடி மாவட்டத்தில், நடப்பு ராபி பருவத்தில், மக்காச்சோளம் மானாவாரி மற்றும் இரவைப் பயிராக அதிக அளவில்பயிரிடப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கண்காணிக்க வேளாண்மைத்துறை அலுவலர்கள், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கயத்தாறு வட்டாரத்தில் சிதம்பராபுரம், கழுகாசலபுரம் மற்றும் கோவில்பட்டி வட்டாரத்தில் உளத்துப்பட்டி, இடைச்செவல் ஆகிய கிராமங்களில் ஆய்வுசெய்ததில், பயிர் செய்து 25 நாட்களான மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதல் பரவலாக தென்படுவது கண்டறியப்பட்டது.
இதனை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த கோரோஜென் என்ற பூச்சி மருந்தை ஒரு ஏக்கருக்கு 80 மில்லி வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிரின் குருத்து பகுதி நன்கு நனையும்படி தெளித்து புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் அறிவுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT