Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் :

அதிமுக பொன்விழாவை கொண்டாடுவது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முக நாதன் தலைமை வகித்து பேசினார்.

அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆருக்கும், வளர்த்த ஜெயலலிதாவுக்கும் உறுதுணையாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பது, அதிமுக பொன்விழாவை மாவட்ட தலைநகரம் முதல் குக்கிராமம் வரை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானபிரகாசம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x