Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

செல்போன் கடையில் திருடிய 3 பேர் கைது :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் கேசவ நகரில் வசிப்பவர் தீப்சிங்(28). இவர், ஆரணி காந்தி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்களை மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் கடந்த 8-ம் தேதி இரவு திருடிச் சென்றுள்ளனர். ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில் ஆற்காட்டில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் பின்மால் வட்டம் சோனா போர்டா கிராமத்தில் வசிக்கும் இந்திர் சிங் மகன் ஜாலம்சிங் ரத்தோர்(27), பவணி சிங் மகன் ரகுல் சிங்(30), பியாரேஜ் கிராமத்தில் வசிக்கும் மாதாஜி ராஜ் புரோகித் மகன் விக்ரம்சிங்(34) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 1,100 மொபைல் டச் ஸ்கிரீன், 30 மொபைல் டிஸ்பிளே, 525 மொபைல் காம்போ எல்இடி உள்ளிட்ட உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x