Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM
திருப்பத்தூர்: திருப்பத்துார் அருகே கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜமாணிக்கம்(55). இவர், நேற்று நண்பகல் 12 மணியளவில் வெங்களாபுரம் அருகே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஆட்டோ ராஜமாணிக்கம் மீது மோதியது. இதில், ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருப்த்தூர் கிராமிய காவல் தறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வெங்களாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருள்பிரகாஷ்(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT