Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் - தமிழகத்தில் 50 இடங்களில் இன்று மருத்துவ முகாம்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை

கலைஞரின் வருமுன் காப்போம்திட்டத்தின்படி இன்று 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 5-வது கட்ட மெகாகரோனா தடுப்பூசி முகாம் 32 ஆயிரம் இடங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று காலை சென்னைதிரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2006 டிசம்பர் 30-ம் தேதி கருணாநிதியால் தொடங்கப்பட்ட வருமுன்காப்போம் திட்டம் கூடுதல் மருத்துவ வசதிகளுடன் கடந்த மாதம் 29-ம் தேதி சேலத்தில் முதல்வர் ஸ்டாலினால் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில் 12-ம்தேதி (இன்று) காலை 9.30மணிக்கு தொடங்கி பிற்பகல் 4 மணிவரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நடைபெற உள்ளது.அந்த முகாம்களில் 17 அரங்குகளில் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x