Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
கோவையில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (அன்னூர்), தென்குமாரபாளையம், திவான்சாபுதூர் ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவி, பெள்ளாதி, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, நம்பர் 10 முத்தூர், சீரபாளையம், குருடம்பாளையம், ஜமீன் முத்தூர், கள்ளிப்பாளையம், போகம்பட்டி, மாதம்பட்டி ஆகிய 10 ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் பதவிகளுக்கு கடந்த 9-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.12) நடக்கிறது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை அன்னூர் கே.ஜி. பள்ளி வளாகத்திலும், போகம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை சுல்தான்பேட்டை ஊராட்சிஒன்றிய பள்ளியிலும் நடக்கிறது. இரு ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குகள் ஆனைமலை ஒன்றிய அலுவலகத்திலும், அன்னூர், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT