Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

பத்திரப் பதிவு அலுவலகங்களில் குறைதீர் முகாம் :

பத்திரப் பதிவு அலுவலகங்களில் முதன் முறையாக நேற்று நடைபெற்ற குறைதீர் முகாம்களில் ஏராளமானோர் மனு அளித்தனர்.

பத்திரப் பதிவு தொடர்பான குறைகளை களைய, மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் மண்டல பதிவுத்துறை டிஐஜி அலுவலகங்களில் திங்கட்கிழமைதோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, கோவை மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை, திருப்பூர், உதகை, கோபி, ஈரோடு ஆகிய 5 பதிவுத்துறை அலுவலகங்கள் மற்றும் கோவை ரெட்ஃபீல்ட் சாலையில் உள்ள பத்திரப்பதிவு டிஐஜி அலுவலகத்தில் நேற்று குறைதீர் முகாம்கள் நடந்தன.

பதிவுத்துறை டிஐஜி அலுவலகத்தில் டிஐஜி சுவாமிநாதன் தலைமை வகித்து, மனுக்களை பெற்றார். மாவட்ட பதிவுத்துறை அலுவலகங்களில், மாவட்ட பதிவாளர்கள் மனுக்களை பெற்றனர். இந்த முகாம்களில், பொதுமக்கள் கலந்துகொண்டு நிலம் பதிவு செய்வதில் உள்ள இடையூறுகள், சிக்கல்கள் குறித்தும், பத்திர ஆவணங்கள் பெறுவதில் உள்ள சிக்கல், வில்லங்க சான்றிதழில் திருத்தம், முறைகேடான பதிவுகள், திருமண பதிவுகள், சேவை குறைபாடுகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.

பத்திரப் பதிவு டி.ஐ.ஜி. சுவாமிநாதன் கூறும்போது, ‘‘கோவை மண்டலத்தில் 45 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 12 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x