Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
கோவை: ராவ் மருத்துவமனை சார்பில் ‘ஹிஸ்டெரோஸ்கோபி’ சிகிச்சை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். ஹிஸ்டெரோஸ்கோபி குறித்து மருத்துவர்களிடையே புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் மருத்துவமனையின் மூத்த லேப்ரோஸ்கோபி, ஹிஸ்டெரோஸ்கோபி சிகிச்சை நிபுணர் தாமோதர் ராவ் பேசும்போது, “பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினைகள் அதிகரித்துவரும் நிலையில், அதற்கு விரைவாக, சிறந்த முறையில் தீர்வுகாணும் வழிமுறைகளை மகப்பேறு மருத்துவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஹிஸ்டெரோஸ்கோபி மூலம் கருப்பையில் இருக்கும் பிரச்சினைகளை மகப்பேறு மருத்துவர்கள் கண்டறிந்து, அதற்கு துல்லியமாக சிகிச்சை அளிக்க முடியும்” என்றார்.l
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT