Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
திருப்பூர்: பல்லடம் அருகே இச்சிப்பட்டி தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம் (42). இவரது தங்கை சகுந்தலா (37). நேற்று முன்தினம் சகுந்தலா அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறிவிழுந்தார். இதனை பார்த்த சுந்தரம், அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். இதில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், பல்லடம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரது சடலங்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு சகுந்தலாவின் சடலத்தை மீட்டனர். கிணற்றுக்குள் விஷப்பாம்புகள் இருந்ததால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை பிடித்து, அப்பகுதியில் உள்ள காட்டில் விட்டனர். இதையடுத்து நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது. நேற்று காலை சுந்தரத்தின் சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT