Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம்-கரூர் சாலை பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10 விவசாயிகள் 75 மூட்டைகள் (3,798 கிலோ) கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முத்தூர், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 வியாபாரிகள் பங்கேற்றனர். அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.99-க்கும், குறைந்தபட்சம் ரூ.83-க்கும், சராசரியாக ரூ.99-க்கும் கொப்பரை விற்பனையானது. இதற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT