Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு :

திருப்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷன்சிங் (64). இவர், பல்லடம் அருகே சித்தம்பலத்தில் உள்ள நூற்பாலையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ரிஷிராம் (25), ராம் (20) ஆகியோர் கோவை சாலையில் வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனம் கிஷன்சிங் மீது மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். இதில் கிஷன்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராம் உயிரிழந்தார். இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x