Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் மாநகரில் உக்கடம், பீளமேடு, ஆவாரம்பாளையம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், சாயிபாபா காலனி, வடவள்ளி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சில மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
குறிப்பாக, அவிநாசி சாலை அண்ணா மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ரயில்நிலையம் அருகேயுள்ள லங்கா கார்னர் ரயில்வே பாலம் உள்ளிட்ட மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சித்திரைச்சாவடி, பேரூர் புட்டுவிக்கி உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. நேற்று சிறுவாணி அணை நீர்மட்டம் 43.75 அடியாகவும், பில்லூர் அணை நீர்மட்டம் 90 அடியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT