Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

கேப்ஜெமெனை இன்ஜினியரிங் இந்தியா நிறுவனத்துடன் - டாக்டர் மகாலிங்கம் பொறியியல் : தொழில்நுட்பக் கல்லூரி ஒப்பந்தம் :

கோவை

பொள்ளாச்சியில் உள்ள டாக்டர்‌ மகாலிங்கம்‌ பொறியியல்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரி, கேப்ஜெமெனை இன்ஜினியரிங்‌ இந்தியா நிறுவனத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பெங்களூருவில்‌ நடந்த இந்நிகழ்வில் கேப்ஜெமெனை இன்ஜினியரிங் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்‌ சந்திரா ரெட்டி, நிர்வாகத் துணைத்‌ தலைவர்‌ பிரசாத்‌ ஷெட்டி, துணைத்‌ தலைவர்‌ அனந்தகுமார்‌ மணி, மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரி முதல்வர்‌ ஆ.ரத்தினவேலு, இயந்திரவியல்‌ துறை தலைவர்‌ ஐ.ராஜேந்திரன்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு பிரிவின்‌ தலைவர்‌ சேவுகமூர்த்தி ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

இதன்மூலம் கேப்ஜெமெனை இன்ஜினியரிங்‌ இந்தியா நிறுவனத்தினர், தென்னிந்தியாவிலேயே முதல்‌ முறையாக சீமென்ஸ்‌ பிஎல்‌எம்‌ டீம் சென்டர்‌ மென்பொருளைக்‌ கொண்டு “உற்பத்தி சார்‌ வாழ்க்கை சுழற்சி மேலாண்மைத்‌ தொழில்நுட்ப ஆய்வகம்‌” தொடங்குவதற்கு மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரியைத்‌ தேர்வு செய்துள்ளனர். இதனால் கல்லூரியில்‌ இயந்திரவியல்‌ மற்றும்‌ வாகனவியல்‌ துறையில்‌ பயிலும்‌ 50 மாணவர்களுக்கு கேப்ஜெமெனை இன்ஜினியரிங்‌ இந்தியா நிறுவனத்தில்‌ பயிற்சி மற்றும்‌ வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

நாக் எனும்‌ தேசிய மதிப்பீட்டு மற்றும்‌ அங்கீகார நிறுவனம்‌, மகாலிங்கம்‌ பொறியியல்‌ கல்லூரிக்கு உயரிய “ஏ ” தரச்‌ சான்றிதழ்‌ வழங்கி கெளரவித்துள்ளது. கேப்ஜெமெனை நிறுவனம்‌ உலகளவில்‌ பல்வேறு நிறுவனங்களின்‌ கூட்டு முயற்சியுடன்‌ தொழில்நுட்ப ஆற்றலைப்‌ பயன்படுத்தி தங்கள்‌ வணிகத்தை மாற்றுவதற்கும்‌ நிர்வகிப்பதற்கும்‌ செயலாற்றி வருகிறது.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x