Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி :

இதுதொடர்பாக அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு மாதமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மாதம் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளலாம். இதில் காந்தியடிகளும் - தமிழகமும் என்கிற தலைப்பில் தமிழில், 4 பக்கங்களுக்கு மிகாமல் யுனிகோடில் தட்டச்சு செய்து 9443442991 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு வருகிற 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெறும் மூவருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x