Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியில் இன்று வருமுன் காப்போம் திட்ட முகாம் :

நாமக்கல்: நாமக்கல் ஆர்.புதுப்பட்டி பள்ளியில் இன்று (12-ம் தேதி) கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராசிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று (12-ம் தேதி) கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம் மற்றும் சித்த மற்றும் இந்திய மருத்துவம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்கின்றனர். மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உள்ளனர். எனவே, சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x