Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

சேலம்: காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை ரேஷன்கடைகளில் காலியாக வுள்ள 3,500 விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதுதொடர்பாக ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:

ரேஷன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணிபுரிந்து உயிரிழந்த பணியாளர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x