Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தூய்மைப் பணியாளர் :

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர், தனது கணவரைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு வந்த ஆட்சியர் காரைவிட்டு இறங்கி அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். பின்னர் மனுவை பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

திருமோகூர் அம்மாபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவர், கடந்த மார்ச் 28-ல் ஒத்தக்கடை பகுதியில் மயங்கி கிடந்தார். அவரது மனைவி தூய்மைப் பணியாளரான பாக்கியா கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் நாகராஜ் இறந்து விட்டார். ஒத்தக்கடை போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். அதிருப்தி அடைந்த பாக்கியா, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஒத்தக்கடை காவல்நிலையத்தில் பல முறை புகார் செய்துள்ளார். ஆனால், போலீஸார் நட வடிக்கை எடுக்காமல் இருந்ததால் நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயன்றார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x