Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற எஸ்எம்ஏ பள்ளி மாணவிக்கு பாராட்டு :

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வர்ஷனாலாயிஸ். இவர், இந்திய அஞ்சல்துறை நடத்திய இளைஞர்களுக்கான சர்வதேச கடிதம் எழுதும்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுரூ.5 ஆயிரத்துக்கான காசோலையுடன் பாராட்டுப்பத்திரம், விருது பெற்றார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் பரிசளித்தார். நிகழ்ச்சியில் அஞ்சல்துறை முதன்மைத் தலைவர் செல்வகுமார், எஸ்எம்ஏ பள்ளி தாளாளர் ராஜசேகரன், மாணவியின் பெற்றோர் சிவகுருநாதன், நித்திஸா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவியை பள்ளி முதல்வர் டாக்டர் மகேஸ்வரி ராஜசேகரன், அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார், துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x