Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன்குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விசாலாட்சி(67). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் இலந்தையடித்தட்டில் உள்ள கோயிலுக்கு தெங்கம்புதூர் வழியாக சென்றுகொண்டிருந்தனர். மாலைஅணிந்தான் குடியிருப்பு சந்திப்பில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், சுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி இருவரும் காயம் அடைந்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி விசாலாட்சி நேற்று மரணமடைந்தார். சுசீந்தரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT