Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

பாஜகவினர் 900 பேர் மீது வழக்கு :

திருநெல்வேலியில் பாஜக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொன் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நாகர்கோவில், தக்கலை, இரணியல், கொட்டாரம் உட்பட 22 இடங்களில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 900 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x