Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

டாஸ்மாக் பணியாளர்கள் மீதான தாக்குல் சம்பவங்களைக் கண்டித்தும், பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலைக் கண்டித்தும், கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் துளசிதாஸ் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். விற்பனைத் தொகையை தினமும் கடைக்கு வந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.சரவணன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநிலப் பொருளாளர் து.ஜெய்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x