Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

‘கோயில்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய போதிய காவலாளிகளை நியமிக்க வேண்டும்' :

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் அர்ஜூன் சம்பத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சிறுவாச்சூரில் சாமி சிலைகள் உடைப்பு சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இதுபோன்ற கோயில்களில் பாதுகாப்பை உறுதிசெய்யும்விதமாக போதிய காவலாளிகளை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். சேதமடைந்த சிலைகளை புனரமைத்து, பரிகாரபூஜை செய்து, கோயிலை விரைவில் திறக்க வேண்டும். இதேபோல, கரோனாவை காரணம் காட்டி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ள கோயில்களை விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x