Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் :

அரியலூர்: வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கோயில்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயில்களை திறக்க வேண்டும். அரியலூரில் ஆக்கிரமிப்பிலுள்ள கோதண்டராமசாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும். கோயில் நிலங்களை தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x