Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

தடுப்பூசி பணியில் ஈடுபட்ட ஊழியரை தாக்கிய 2 பேர் கைது :

பெரம்பலூர் மாவட்டம் புது நடுவலூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, தடுப்பூசி முகாமுக்கு அழைக்கும் பணிகளை செய்துவந்த பணியாளர் ஒருவரை புதுநடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன்கள் ரஞ்சித்(26), பிரதீப்(24) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x