Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

புதுக்கோட்டையில் - இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.12.51 லட்சம் நிதியுதவி வழங்கல் :

புதுக்கோட்டை கலீப் நகரைச் சேர்ந்தவர் கே.கண்ணன்(51). இலுப்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த இவர், கடந்த மாதம் சிவபுரம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், இவரது குடும்பத்தினருக்கு காவலர்களைக் கொண்ட ‘சங்கமம்-97’ எனும் குழு சார்பில் சேகரிக்கப்பட்ட நிதி ரூ.10 லட்சத்து 93 ஆயிரம் மற்றும் திருச்சி பிஆர்எஸ் எனும் காவலர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட நிதி ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 501 என மொத்தம் ரூ.12,51,501-ஐ பிரித்து அவரது மனைவி, மகள் மற்றும் மகனுக்கு காப்பீடு பத்திரம் மற்றும் காசோலையாக நேற்று வழங்கப்பட்டது. இதை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x