Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை அடுத்த முசிறி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் சிவசக்திவேல்(14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் மகன் கமலேஷ்(11). 6-ம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான இருவரும், அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் நேற்று முன்தினம் மாலை நாவல் பழம் பறிக்கச் சென்றுள்ளனர். இரவாகியும் இருவரும் வீட்டுக்கு திரும்பாததால், இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுவர்கள் இருவரையும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிவசக்திவேல் சடலம் நேற்று காலை ஏரி நீரில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் ஏரி நீரில் தேடியதில், நேற்று மதியம் கமலேஷின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT