Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து, பதிவான வாக்குகள் மன்னார்குடி அரசினர் கலைக் கல்லூரியிலும், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று(அக்.12) நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். அப்போது, அங்கு வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x