Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாரூர் மாவட்டத்தில், கடந்த காலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக தேவையான அளவுக்கு உரம் கையிருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் உரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு தேவையான உரம் கிடைக்கவில்லை. பயிர்களுக்கு அடியுரம் இட வேண்டிய தருணத்தில் இடுபொருட்கள் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் உர விற்பனையாளர்கள் அதிக விலைக்கு உரம் விற்பது, வேறு சில வேளாண் பொருட்களையும் சேர்த்து வாங்கிக்கொள்ள வற்புறுத்துவது என விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.எனவே, இதுதொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறையும் ஒருங்கிணைந்து, போர்க்கால அடிப்படையில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT