Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM
குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-ம்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூந்தண்டலம் ஊராட்சியில் உள்ள 173-ம் எண் கொண்ட வாக்குச்சாவடியில் 12-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பாமகவேட்பாளரின் சின்னம் இல்லாமல் வாக்கு சீட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மட்டும் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் இன்று (அக்.11) மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT