Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM

16-ல் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் :

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் (சிடபிள்யூசி) வரும் 16-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் சூழல், அடுத்துவரும் பேரவைத் தேர்தல், கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் விவாதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்க வுள்ளனர்.

கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என்று தலைமை மீது அதி ருப்தியில் உள்ள ஜி-23 தலைவர் கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள், காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வாரியத் தேர்தல் உறுப்பினர்கள் குறித்த தேர்தலை யும் ஜி-23 தலைவர்கள் நடத்த காங்கிரஸ் தலைமையை வலி யுறுத்தி வருகின்றனர். ஆதலால், இந்தக் காரியக் கமிட்டிக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரியக் கமிட்டிக் கூட்டத்தை விரைவாகக் கூட்டக் கோரியும் பல்வேறு விவகாரங்கள் ஆலோ சிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறியும் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சிக்கு நிரந்திரமான தலைவர் வேண்டாம். யார் கட்சியில் முடிவுகளை எடுக் கிறார்கள் என எங்களுக்குத் தெரிய வில்லை” என்று தெரிவித் திருந்தார்.

கடந்த முறை நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில், கரோனா 2-வது அலையைக் காரணம் காட்டி, உட்கட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிவைக்கப்பட்டது, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற் கான தேதியும் குறிக்கப்பட வில்லை. ஆதலால், வரும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும், எப்போது முடியும் என்பதுதான் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நேரத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது தேர்தல் வெற்றியை பாதிக்கும். ஆதலால், உட்கட் சித் தேர்தல் நடத்துவது தள்ளிவைக் கப்படும். ஆனால், அனைத்து உறுப்பினர்கள் கருத்துப்படி தேர் தல் நடத்தும் தேதி முடிவாகும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலை வர் பதவியை ராகுல் காந்தி ஏற் பாரா, அல்லது தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடுவாரா எனத் தெரியவில்லை. ஆனால், இந்திய தேசிய மாணவர் அமைப்பு, மகிளா காங்கிரஸ், காங்கிரஸ் சமூக வலைதளம் ஆகியவை அடுத்த தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இதற்கிடையில் பல மாநிலங் களில் மூத்த நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.இதுகுறித்தும் விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x