Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

திருப்பதி 2-ம் நாள் பிரம்மோற்சவம் : சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் :

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை, வாசுகியாக கருதப்படும் 5 தலை கொண்ட சின்ன சேஷ வாகனத்தின் மீது  கிருஷ்ணராக மலையப்பர் காட்சியளித்தார்.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஏகாந்தமாக நடத்தப்பட்டு வரும் பிரம்மோற்சவ விழாவில், வாகன சேவைகளும் கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் நாளான நேற்று முன் தினம் இரவு, ஆதிசேஷனாக கருதப்படும் 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவியுடன் மலையப்பர் எழுந்தருளினார். 2-ம் நாளான நேற்று காலை, சின்ன சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையை தொடர்ந்து, மாலை ஊஞ்சல் சேவைகள் நடைபெற்றன. பின்னர் இரவு 7 முதல் 8 மணி வரை அன்ன வாகனத்தில் உற்சவர் மலையப்பருக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x