Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை, வாசுகியாக கருதப்படும் 5 தலை கொண்ட சின்ன சேஷ வாகனத்தின் மீது கிருஷ்ணராக மலையப்பர் காட்சியளித்தார்.
கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஏகாந்தமாக நடத்தப்பட்டு வரும் பிரம்மோற்சவ விழாவில், வாகன சேவைகளும் கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் நாளான நேற்று முன் தினம் இரவு, ஆதிசேஷனாக கருதப்படும் 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவியுடன் மலையப்பர் எழுந்தருளினார். 2-ம் நாளான நேற்று காலை, சின்ன சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையை தொடர்ந்து, மாலை ஊஞ்சல் சேவைகள் நடைபெற்றன. பின்னர் இரவு 7 முதல் 8 மணி வரை அன்ன வாகனத்தில் உற்சவர் மலையப்பருக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT