Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM
மும்பையின் புறநகர் நவி மும்பையில் உள்ளது நவசேவா துறைமுகம். இங்கு மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் கடந்த வாரம் தீவிர சோதனை நடத்தினர். இதில் தேங்காய் எண்ணெய் பார்சல்கள் என எழுதப்பட்டிருந்த பெட்டிகளில் ரூ.125 கோடி மதிப்பிலான 25 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
அந்த பார்சல்களை இறக்கு மதி செய்த சந்தீப் தக்காரிடம் அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர், அளித்த தகவலின்படிஅவரது நண்பரும், தொழிலதிபருமான ஜெயீஷ் சாங்வியை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT