Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM
மும்பை: ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணப் பரிவர்த்தனை சேவை நாள் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த சேவையை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) நிர்வகிக்கிறது.
வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை வரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது தவிர ஆப்லைன் மூலமாக சில்லரை வர்த்தகத்தில் டிஜிட்டல் பேமென்ட் வழங்கும் முறையையும் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இணையதள வசதி இல்லாத பகுதிகளிலும் செயல்படுத்தும் வகையில் டிஜிட்டல் பரிவர்த் தனையை மேற்கொள்ள உதவுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT