Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM
பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன.
பெங்களூரு ஆடுகோடி அருகே லக்கசந்திராவில் கடந்த 28-ம் தேதி 50 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கடந்த 1-ம் தேதி டைரி சர்க்கிள் அருகே கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் இடிந்தது. கடந்த 3-ம் தேதி நாகரபாவி அருகே 3 மாடி இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்துகளில் மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கஸ்தூரி நகரில் 5 மாடி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது. அதில் வசித்த 8 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டன. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சில மணி நேரங்களில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா கூறியதாவது:
அண்மையில் இடிந்து விழுந்த 4 கட்டிடங்களில் 3 கட்டிடங்களுக்கு முறையாக மண் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. கஸ்தூரி நகர் கட்டிடம் தரைதளத்துடன் 2 மாடி வீடு கட்ட அனுமதி பெற்றப்பட்டு, விதிமுறையை மீறி கூடுதலாக 2 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சாய்ந்துள்ளது. விதிமீறல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT