Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் - இன்று கனமழைக்கு வாய்ப்பு : பிற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்

சென்னை

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதா வது:

தமிழக கடலோர பகுதிகளையொட்டிய வளிமண்டல மேலடுக்குசுழற்சியால் 7-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

6-ம் தேதி காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில்அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 18 செமீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 12 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x