Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM
தொழிநுட்பக் கல்வி இயக்குநர் கே.லட்சுமி பிரியா, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
பொறியியல் கலந்தாய்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றுஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.
அதைமீறி சில கல்லூரிகள் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான கல்வி, விடுதி உட்பட அனைத்து விதமான கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்றுள்ளது. எனவே, அரசின் உத்தரவை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீ காரம் ரத்து செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT