Published : 07 Oct 2021 03:16 AM
Last Updated : 07 Oct 2021 03:16 AM

கிறிஸ்தவராக மதம் மாறியவர் இந்து எனக்கூறி - ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை எதிர்த்து வழக்கு : நீதிபதிகள் தலையிட மறுப்பு

கிறிஸ்தவராக மதம் மாறியவர் இந்து ஆதிதிராவிடர் என ஜாதி சான்றிதழ் பெற்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகக்கூறி நீதிபதிகள் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டு, வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்தவராக மதம் மாறிய சோளிங்கரைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர், இந்து ஆதிதிராவிடர் என போலியாக ஜாதிச்சான்றிதழ் பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகக்கூறி அமெரிக்காவில் வசிக்கும் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார் சத்தியசீலன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், புலிவலம் கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டு முகவரியை போலியாக பயன்படுத்தி பிரேம்நாத் என்பவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக குற்றஞ் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்புமனு தாக்கல் ஏற்கெனவே முடிவடைந்து வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தேர்தல் நடைமுறை தொடங்கிய பிறகு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் முடிந்த பிறகு மனுதாரர் உரிய அமைப்பை நாடி பரிகாரம் தேடலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x