Published : 06 Oct 2021 03:10 AM
Last Updated : 06 Oct 2021 03:10 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 849, பெண்கள் 600 என மொத்தம் 1,449 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக சென்னையில் 179, கோவையில் 151, செங்கல்பட்டில் 113 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 1,548 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம்முழுவதும் 16,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
16 பேர் உயிரிழப்பு
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,497பேர் இறந்துள்ளனர் என்றுதமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT