Published : 06 Oct 2021 03:10 AM
Last Updated : 06 Oct 2021 03:10 AM

இனிமேல் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் - வள்ளலார் பிறந்த அக்.5-ம் தேதி ‘தனிப்பெருங்கருணை நாள்’ : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வள்ளலார் பிறந்தநாளான அக் டோபர் 5-ம் தேதி இனி ஆண்டு தோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித் துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

‘அருட்பிரகாச வள்ளலார்’ என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் கடந்த 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்.

அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் விதமாக சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். வட லூரில் சத்திய ஞான சபையை எழுப்பினார். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித் துயர் போக்க சத்திய தரும சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்று வரை அணை யாமல் தொடர்ந்து எரிந்தபடி, பசி யோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்பிக்கொண்டு இருக்கிறது.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவ காருண்ய ஒழுக்கம் ஆகிய உரை நடைகளை எழுதியுள்ளார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படு கிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பா 6-ம் திருமுறையில், ‘‘எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன்’’ என்றார்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தரும சாலையையும், சித்தி வளா கத்தையும் உருவாக்கினார். பசிப் பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்தார். ‘அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி’ என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க அடி களார் பிறந்தநாளான அக்டோபர் 5-ம் தேதி இனி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறி விக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x