Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

1000 பக்தர்களுக்கு இலவச தரிசனம் :

பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களிலும் தினமும் 1,000 பக்தர்கள் வீதம் 9,000 பக்தர்கள் இலவச சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆந்திராவின் 13 மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்கப்படும்.

மலைவாழ் மக்கள் மற்றும் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத மாற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக இந்த நடவடிக்கையில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. பின்தங்கிய பகுதிகளில் மதமாற்றத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு ரூ. 25 கோடி செலவில் ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 502 கோயில்களை தேவஸ்தானம் இலவசமாக கட்டிக்கொடுத்தது. இங்கு தினசரி பூஜை செலவையும் தேவஸ்தானம் ஏற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x