Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

நாட்டில் புதிதாக 24,354 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,354 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த நோயாளி கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 91,061 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 234 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 48,573 ஆக அதிகரித் துள்ளது.

தற்போது சிகிச்சையில் இருப் போர் எண்ணிக்கை 2 லட்சத்து 73,889 ஆக குறைந்துள்ளது. இது, மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 0.81 சதவீதம் ஆகும். கடந்த 2020 மார்ச்சில் இருந்து இது மிகக் குறைவு ஆகும்.

கரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தோர் விகிதம் 97.86 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மாச்சில் இருந்து இது மிக அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,335 குறைந்துள்ளது.

இவ்வாறு அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி 20 லட்சத்தை கடந்தது. படிப்படியாக இது, செப்டம்பர் 28-ல் 60 லட்சம், அக்டோபர் 11-ல் 70 லட்சம், அக்டோபர் 29-ல் 80 லட்சம், நவம்பர் 20-ல் 90 லட்சம் என உயர்ந்து டிசம்பர் 19-ல் ஒரு கோடியை கடந்தது.

கடந்த மே மாதம் 4-ம் தேதி 2 கோடியையும், ஜூன் 23-ல் 3 கோடியையும் கடந்தது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x