Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

தயார் நிலையில் இந்திய பீரங்கி படை :

இந்திய ராணுவத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் கே-9 வஜ்ரா பீரங்கிகள் சேர்க்கப்பட்டன. இந்த பீரங்கி மூலம் 52 கி.மீ. தொலைவுக்கு தாக்குதல் நடத்த முடியும். எந்த நிலப்பரப்பிலும் வேகமாக செல்லக்கூடியது. கடந்த பிப்ரவரி முதலே லடாக் மலைப் பகுதியில் கே-9 வஜ்ரா பீரங்கிகள் குவிக்கப்பட்டன.

சீன படைகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த அதிநவீன பீரங்கிகளை பயன்படுத்தும் இந்திய பீரங்கி படை லடாக் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி நராவனே கூறும்போது, "லடாக்கின் உயரமான மலைப் பகுதிகளில் கே-9 வஜ்ரா பீரங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார். கே-9 வஜ்ரா பீரங்கிகள் மட்டுமன்றி பல்வேறு வகையான பீரங்கிகள், ரஃபேல் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x