Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

மஜக பிரமுகர் வசீம்அக்ரம் கொலை வழக்கில் : வாணியம்பாடியை சேர்ந்த மேலும் 2 பேர் கைது :

வாணியம்பாடி: மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை செயலாளர் வசீம்அக்ரம்(42). இவர், கடந்த மாதம் 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சிபுரம் அருகே 2 பேரும், வாணியம்பாடியைச் சேர்ந்த 7 பேர் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், டீல் இம்தியாஸ் உட்பட 8 பேர் காஞ்சிபுரம், சிவகாசி, தஞ்சாவூர், சென்னை ஆகிய நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்ப தாகவும், வசீம்அக்ரம் கொலை செய்யப்பட்ட அன்றிரவு கொலையாளிகள் தப்பிச்சென்ற கார் வாணியம்பாடியைச் சேர்ந்தவரின் கார் என்பதும், கார் ஓட்டுநராக இருந்தவரும் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, வாணியம்பாடி பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர் இம்ரான் (40), ஜீவா நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான அயூப் (31) ஆகிய 2 பேரை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த லாலாப்பேட்டை ஏரிப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இம்ரான் மற்றும் அயூப் ஆகியோர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்த இம்ரான், அயூப் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x