Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM
நாடு முழுவதும் புதிதாக 18,870 பேருக்கு கரோனா தொற்று பாதிப்புகண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 378 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை கரோனாவுக்கு 179 பேர் இறந்தனர்.
செவ்வாய்கிழமையன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துநாடு முழுவதும் 378 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,477,51 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மேலும் 28,178 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதையும் சேர்த்து நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,86,180 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 54,13,332 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 87,66,63,490 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 56,74,50,185 பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT